உள்ளூர் செய்திகள்
கைதான மகாலட்சுமி, ராமசந்திரன்.

தொழிலாளி மரணத்தில் திருப்பம்- உல்லாசத்துக்கு அழைத்த காதலனை கீழே தள்ளி கொன்ற கள்ளக்காதலி

Published On 2022-01-27 04:21 GMT   |   Update On 2022-01-27 04:21 GMT
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பை அடுத்து உள்ள வளையமாதேவியைச் சேர்ந்தவர் வேல்முருகன். (வயது45). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரிவெட்டி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில், வேல்முருகன் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது.

அதனை தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.

கரிவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். அவரது மனைவி மகாலட்சுமி (40) என்பவருக்கும், கொலை செய்யப்பட்ட வேல்முருகனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று வேல்முருகன் கள்ளக்காதலி மகாலட்சுமி வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் மகாலட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்தார்.

வேல்முருகன் போதையில் இருந்ததால் மகாலட்சுமி மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எதேச்சையாக மகாலட்சுமி திடீர் என வேல்முருகனை கீழே தள்ளினார். இதில் தலையில் அடிபட்ட வேல்முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி பயந்து போனார்.

உடனே இந்த விசயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக வேல்முருகனின் நண்பர் ராமசந்திரனிடம் தெரிவித்தார். தனக்கு உதவி செய்தால் பணம் தருவதாக கூறி உள்ளார். இதனை நம்பிய ராமச்சந்திரன் அங்கு சென்றார். பின்னர் வேல்முருகன் உடலை 2 பேரும் தூக்கி கொண்டு பள்ளி வளாகத்தில் வீசி சென்று எதுவும் தெரியாதது போல் இருந்து உள்ளனர்.

மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்து உள்ளது

இதனையடுத்து சேத்தியாத்தோப்பு போலீசார் சந்தேக வழக்கை கொலை வழக்காகப் பதிந்து மகாலட்சுமி, ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

Similar News