செய்திகள்
தாய்லாந்து வீராங்கனை

குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுர் ஏமாற்றம்

Published On 2021-07-30 03:44 GMT   |   Update On 2021-07-30 03:44 GMT
தாய்லாந்து வீராங்கனைக்கு எதிராக ஒருமுறை கூட ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் 0:5 என்ற கணக்கில் சிம்ரஞ்சித் கவுர் தோல்வியடைந்தார்.
குத்துச்சண்டை போட்டியில் இன்று பெண்களுக்கான லைட்வெயிட் (57-60 கிலோ) பிரிவு சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தாய்லாந்தை சேர்ந்த சுடாபோர்ன் சீசோண்டீயை எதிர்கொண்டார்.

தாய்லாந்து வீராங்கனை மூன்று சுற்றிலும் சிம்ரஞ்சித்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.

இதனால் ஐந்து நடுவர்களிடமும் தாய்லாந்து வீராங்கனை சுடாபோர்ன் சீசோண்டீ 30-27, 30-27, 30-27, 30-27, 30-27 என புள்ளிகள் பெற்று 5:0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுரை வீழ்த்தினார்.

Tags:    

Similar News