செய்திகள்
EVM உள்ள மையங்களை இரவு பகல் பாராது பாதுகாத்திட வேண்டும்: திமுக-வினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு EVM கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 234 சட்டசபை இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் EVM-க்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. மே 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக-வினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் ‘‘அதிமுக- பாஜகவின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் கழகத்தினரும், கூட்டணித் தோழர்களும் ஆற்றிய தேர்தல் பணி போற்றுதலுக்குரியது. பணி தொடர்கிறது. EVM உள்ள மையங்களை இரவு பகல் பாராது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் எச்சரிக்கை உணர்வுடன் பாதுகாத்திட வேண்டும். அது நம் தலையாய கடமை’’ எனத் தெரிவித்துள்ளார்.