ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்

Published On 2021-02-19 06:53 GMT   |   Update On 2021-02-19 06:53 GMT
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 32-வது ஆண்டாக சமயபுரத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி 32-வது ஆண்டாக நேற்று சமயபுரத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். முன்னதாக காலை 8 மணி அளவில் அய்யலூரில் உள்ள சக்திவிநாயகர், மகாகாளியம்மன், முத்துமாரியம்மன் கோவில்களில் நடந்த அபிஷேக ஆராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மாலை 5 மணி அளவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யலூர் களர்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒன்றிணைந்தனர். இதைத்தொடர்ந்து மாரியம்மன் அலங்கார ரதத்தை இழுத்தவாறு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News