செய்திகள்
கருவலூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:
தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்டசெயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கருவலூர் துணை மின் நிலையத்தில் நாளை 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், ஆனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால் பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதியில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.