தொழில்நுட்பச் செய்திகள்
நியர் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸுடன் களமிறங்கும் மோட்டோ ஜி22- கசிந்த தகவல்
இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஏப்ரல் 8ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் 90Hz IPS LCD டிஸ்பிளே, சைட் மவுண்ட் ஃபிங்கர் ஸ்கேனர், MediaTek Helio G37 பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்றும், ஆண்ட்ராய்டு 12 நியர் ஸ்டாக் மொபைல் ஓஎஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் குவாட் பிக்ஸல் தொழில்நுட்பத்துடன் இடம்பெறவுள்ளது. இத்துடன் 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், டெப்த் சென்சார், மேக்ரோ விஷன் சென்சார் ஆகியவையும் இடம்பெறுகிறது.
இந்த போனின் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.