செய்திகள்
மும்பை போலீசார்

மகாராஷ்டிராவில் மேலும் 253 போலீசாருக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-23 09:39 GMT   |   Update On 2020-09-23 09:39 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 253 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புடன் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது.

மகாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை ஒருநாளில் மட்டும் சுமார் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அம்மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் நின்று பணியாற்றும் துறைகளில் ஒன்றான காவல்துறையைச் சேர்ந்தவர்களும் தப்பவில்லை. 

இந்நிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டு 253 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புடன் 5 போலீசார் உயிரிழந்த நிலையில், இதுவரை 234 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 3 ஆயிரத்து 435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து 18 ஆயிரம் போலீசார் குணம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News