செய்திகள்
குடியாத்தத்தில் தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை
குடியாத்தத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த பிச்சனூர் காளியம்மன்பட்டி கிராமணி தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் அலிபாபா (வயது 51). இவர் கைத்தறி தொழிலுக்கு தேவையான அச்சு கட்டும் வேலை செய்து வந்தார். வாலிப வயதில் குங்பூ பயிற்சியாளராகவும் இருந்து வந்துள்ளார்.
அலிபாபாவிற்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மனைவியும் பிள்ளைகளும் அலிபாபாவை பிரிந்து காஞ்சிபுரத்தில் வசித்து வருகின்றனர்.
அலிபாபா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அலிபாபாவை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். ஆனால் நேற்று பகல் முழுவதும் அலிபாபாவை பார்க்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் பார்த்த போது சேலையால் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்.
தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று அலிபாபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலிபாபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தத்தை அடுத்த பிச்சனூர் காளியம்மன்பட்டி கிராமணி தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் அலிபாபா (வயது 51). இவர் கைத்தறி தொழிலுக்கு தேவையான அச்சு கட்டும் வேலை செய்து வந்தார். வாலிப வயதில் குங்பூ பயிற்சியாளராகவும் இருந்து வந்துள்ளார்.
அலிபாபாவிற்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மனைவியும் பிள்ளைகளும் அலிபாபாவை பிரிந்து காஞ்சிபுரத்தில் வசித்து வருகின்றனர்.
அலிபாபா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அலிபாபாவை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். ஆனால் நேற்று பகல் முழுவதும் அலிபாபாவை பார்க்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் பார்த்த போது சேலையால் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்.
தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று அலிபாபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலிபாபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.