செய்திகள்
வர்ணனையாளர் பொறுப்பு: மஞ்ச்ரேக்கர் நீக்கம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நேர்முக வர்ணனையாளர் பட்டியலில் இருந்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நீக்கப்பட்டுள்ளார்.
வர்ணனை செய்வதில் வல்லவரான மஞ்ச்ரேக்கர் சமீப காலமாக சர்ச்சையை அளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதன் காரணமாக அவரை கிரிக்கெட் வாரியம் நீக்கி உள்ளது. ஐ.பி.எல். போட்டி நடைபெற்றால் அதிலும் அவர் வர்ணனையாளராக இருக்கமாட்டார்.