செய்திகள்
கொள்ளை

பேரையூரில் வன அதிகாரி வீட்டில் கொள்ளை

Published On 2019-09-04 11:10 GMT   |   Update On 2019-09-04 11:10 GMT
பேரையூரில் ஓய்வுபெற்ற வன அதிகாரி வீட்டில் பணம்- பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

மதுரை மாவட்டம், பேரையூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் நயினார் முகமது (வயது 63). ஓய்வுபெற்ற மாவட்ட வன அதிகாரி.

இவரது உறவினர் திருமணம் வெளியூரில் நடந்தது. இதில் குடும்பத்துடன் பங்கேற்க நயினார் முகமது திட்டமிட்டார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் புறப்பட்டனர்.

திருமண விழா முடிந்ததும் நயினார் முகமது குடும்பத்தினர் நேற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் அறை முழுவதும் சிதறிக் கிடந்தன.

இதனால் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து பேரையூர் போலீசாருக்கு நயினார் முகமது தகவல் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து வீட்டை பார்வையிட்டனர். பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக நயினார் முகமது போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை இளமனூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சரவணன் (39). இவர் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் இல்லத்திருமணத்திற்காக கோவை சென்றார்.

பின்னர் வீடு திரும்பிய அவர் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம், சரவணன் தெரிவித்தார்.

வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்கள் யார்? என்பது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News