ஆன்மிகம்
சதுரகிரி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 26-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Published On 2021-03-25 09:06 GMT   |   Update On 2021-03-25 09:06 GMT
வருகிற 26-ந்தேதி பிரதோ‌ஷம் மற்றும் 28-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோச நாட்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

அதன்படி வருகிற 26-ந் தேதி பிரதோ‌ஷம் மற்றும் 28-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி கிடையாது.

அவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மலை அடிவாரத்தில் 26-ந் தேதி காலை 7 மணி முதல் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மலையேற அனுமதிக்கப் படுவார்கள். பிற்பகல் ஒரு மணிக்கு பின் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை.

மேற்கண்ட நாட்களில் கோவிலில் தங்கவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் வருகையையொட்டி அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வ நாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News