உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

டெல்லி தீ விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2022-05-14 03:42 GMT   |   Update On 2022-05-14 03:42 GMT
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை:

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

டெல்லி தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பது  வேதனை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய விழைகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News