செய்திகள்
வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் பழனி பிரசாதம்- அதிகாரி தகவல்
ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து ரூ.250 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பழனி பிரசாத பார்சல், அவரவர் வீடுகளைத்தேடி விரைவு தபால் மூலம் வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தபால் துறையுடன் பழனி தண்டாயுதபாணி (முருகன்) கோவில் நிர்வாகம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தற்போதைய கொரோனா சூழலில் பக்தர்கள் கோவிலுக்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பழனி பஞ்சாமிர்தம், விபூதி, ராஜ அலங்கார திருஉருவப்படம் ஆகியவற்றை ரூ.250-க்கு வழங்குகிறது.
இதற்கான படிவம் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து ரூ.250 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பழனி பிரசாத பார்சல், அவரவர் வீடுகளைத்தேடி விரைவு தபால் மூலம் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
ஈரோடு தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தபால் துறையுடன் பழனி தண்டாயுதபாணி (முருகன்) கோவில் நிர்வாகம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தற்போதைய கொரோனா சூழலில் பக்தர்கள் கோவிலுக்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பழனி பஞ்சாமிர்தம், விபூதி, ராஜ அலங்கார திருஉருவப்படம் ஆகியவற்றை ரூ.250-க்கு வழங்குகிறது.
இதற்கான படிவம் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து ரூ.250 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பழனி பிரசாத பார்சல், அவரவர் வீடுகளைத்தேடி விரைவு தபால் மூலம் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.