செய்திகள்
காய்கறிகள்

சம்பத்நகர் உழவர் சந்தையில் 47 டன் காய்கறிகள் ரூ.13¼ லட்சத்துக்கு விற்பனை

Published On 2021-01-16 08:53 GMT   |   Update On 2021-01-16 08:53 GMT
சம்பத்நகர் உழவர் சந்தையில் கடந்த 3 நாட்களில் ரூ.13 லட்சத்து 29 ஆயிரத்து 326 மதிப்பிலான 47 ஆயிரத்து 246 டன் காய்கறிகள் விற்பனையானது.
ஈரோடு:

பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு வகை காய்கறிகளை சாமிக்கு படையல் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனை மும்முரமாக நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகர், பெரியார்நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சம்பத்நகர் உழவர் சந்தையில் கடந்த 3 நாட்களில் ரூ.13 லட்சத்து 29 ஆயிரத்து 326 மதிப்பிலான 47 ஆயிரத்து 246 டன் காய்கறிகள் விற்பனையானது.
Tags:    

Similar News