வழிபாடு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தீர்த்தவாரி விழா
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் நிறைவு பகுதியாக லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் கோவில் குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் இந்த மாதம் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்தார்.
விழாவின் நிறைவு பகுதியாக கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன் கோவில் குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவு பகுதியாக கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன் கோவில் குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.