செய்திகள்
சீமான்

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி- சீமான் பேட்டி

Published On 2019-12-08 09:59 GMT   |   Update On 2019-12-08 09:59 GMT
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது என்ற சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.

சென்னை மாவட்ட முதன்மை பொறுப்பாளராக கதிர்ராஜேந்திரனும், கூடுதல் பொறுப்பாளர்களாக புகழேந்தி மாறன், சரவணன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளராக அன்பு தென்னரசன், கூடுதல் பொறுப்பாளர்களாக ஏழுமலை, செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இது தவிர மேலும் 30 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சீமான் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. ஊரக உள்ளாட்சி பதவிகளில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனுக்களை பெற்றுள்ளோம்.

இதன்படி வேட்பாளர்களை தேர்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளோம். அவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லது என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு பதில் அளித்த சீமான், அவர் சொல்வது எந்த நாட்டுக்கு என்று தெரியவில்லை என்றார்.

Tags:    

Similar News