உள்ளூர் செய்திகள்
கதிர் ஆனந்த் எம்.பி. நிதி உதவி வழங்கிய காட்சி.

வேலூரில் ரூ.18 கோடி தாலிக்கு தங்கம் நிதி உதவி

Published On 2022-01-13 09:56 GMT   |   Update On 2022-01-13 09:56 GMT
வேலூர் மாவட்டத்தில் 2,409 பயனாளிகளுக்கு ரூ.18 கோடி தாலிக்கு தங்கம் நிதி உதவியை கதிர் ஆனந்த் எம்.பி. வழங்கினார்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். 

கதிர் ஆனந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2409 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், விதவை மறுமண நிதி உதவி, கலப்பு திருமண நிதி உதவி, பெண்கள் திருமண நிதி உதவி என மொத்தம் ரூ.18 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரம் நிதி வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில்:&

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மத்திய அரசு சார்பில் மகளிர் மேம்பாட்டு குழு செயல்படுத்தப்படுகிறது. அதில் நான் உறுப்பினராக இருக்கிறேன். தமிழகத்தில் செயல்படுத்தக் கூடிய தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து நான் தெரிவித்தேன். 

அதனை கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இதுபோன்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் நலனுக்காக மட்டுமே இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது கொரோனா, ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.இதில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் முதியோர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சமூக நல அலுவலர் முருகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News