செய்திகள்
இளையான்குடி அருகே பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 42). பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த போலீசார் பெட்டிக்கடையில் சோதனையிட்டபோது 20 மதுபாட்டில்கள் இருந்தன. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.