செய்திகள்
கோப்புபடம்

தூத்துக்குடி அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி

Published On 2021-06-30 12:32 GMT   |   Update On 2021-06-30 12:32 GMT
தூத்துக்குடி அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தென்காசி மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்தவர் மரிய அருள். இவர் நுண்நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த சுகந்த் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக வேலைபார்ப்பதாகவும், மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளார். இதற்காக அவர், மரியஅருளிடம் இருந்து ரூ.6 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. 

ஆனால் எந்தவேலையும் மரிய அருளுக்கு வாங்கித்தரவில்லை. இதனால் மரிய அருள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சுகந்த் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News