ஆன்மிகம்
திருச்செங்கோட்டில் கோமாதா பூஜை

திருச்செங்கோட்டில் கோமாதா பூஜை

Published On 2021-09-01 05:42 GMT   |   Update On 2021-09-01 05:42 GMT
திருச்செங்கோடு செல்வ விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோமாதா பூஜை நடந்தது. பூஜையில் தமிழில் அர்ச்சனைகள் செய்யப்பட்டன.
திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோமாதா பூஜை நடந்தது. வக்கீல் தங்கவேல் வரவேற்றார்.

சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பாரதிய கிசான் சங்க நிர்வாகி கணேசன், செங்குன்றம் தமிழ் சங்க தலைவர் பொன் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூஜையில் தமிழில் அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

இதில் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜராஜன், அவ்வை கல்வி நிலைய தாளாளர் ராஜேஸ்வரன் காளியண்ணன், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன், மாவட்ட முன்னாள் தலைவர் வக்கீல் நாகராஜ், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ், நகர தலைவர் அகிலா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் சேகர் நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News