செய்திகள்
விபத்து

புளியங்குடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- டிரைவர் பலி

Published On 2021-10-01 10:07 GMT   |   Update On 2021-10-01 10:07 GMT
புளியங்குடியில் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புளியங்குடி:

புளியங்குடி சிந்தாமணி சான்றோர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 37). இவர் அங்குள்ள விவசாய பண்ணையில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

நேற்று மோட்டார் சைக்கிளில் சிந்தாமணியில் இருந்து வாசுதேவநல்லூர் செல்லும் போது கரூரில் இருந்து தென்காசிக்கு சிமெண்ட் ஏற்றி கொண்டு வந்த லாரி சிந்தாமணி தனியார் மருத்துவமனை அருகில் மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் கோபால கிருஷ்ணனின் கை கால்கள், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரது உறவினர்கள் முதலுதவிக்கு தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

இறந்த கோபால கிருஷ்ணனுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இது சம்பந்தமாக லாரி டிரைவரான விருதுநகர் செல்வபாண்டி (31) மீது வழக்குப்பதிவு செய்து புளியங்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News