செய்திகள்
கைது

காரைக்குடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2021-05-28 15:02 GMT   |   Update On 2021-05-28 15:02 GMT
காரைக்குடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 32).இவர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு அருகே மாத்திரை வாங்குவதற்காக மருந்துக்கடை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பார்த்திபன் சட்டைப்பையிலிருந்த ரூ.850-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கீழ வாணியங்குடி பகுதியைச் சேர்ந்த குட்டைசங்கர் (28) பூபதி (32) ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News