உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பெண் தீக்குளித்து சாவு

Published On 2022-01-11 09:09 GMT   |   Update On 2022-01-11 09:09 GMT
ஆலங்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

தஞ்சசை மாவட்டம் பேராவூரணி வத்தலக்காடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி சந்திரா (வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் பர்மா காலனியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போது தன் சகோதரியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டில் இருந்த  மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மளமளவென தீ பற்றி எரிய தொடங்கியதும், வலி தாங்கமுடியாமல் சந்திரா கதறினார்.

இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து படுகாயங்களுடன் சந்திராவை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரா உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சந்திராவின் மகள் கொடுத்த புகாரின் பே
Tags:    

Similar News