செய்திகள்
ராயக்கோட்டை அருகே பெண்ணை கட்டிபிடித்தவர் கைது
ராயக்கோட்டை அருகே பெண்ணை கட்டிபிடித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் பொம்மதாத்தனூர் அருகே அனுசோனை கிராமத்தை சேர்ந்த மாதப்பா மகன் முனேஷ் (வயது 30). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் செல்போனிடம், நேரிலும் சந்தித்து பேசிய வந்ததாக தெரிகிறது. நேறறு முன்தினம் அந்த பெண்ணை முனேஷ் கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது முனேசை, அந்த பெண்ணின் கணவர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனேசை கைது செய்தனர். இதற்கிடையே முனேஷ் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.