செய்திகள்
தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை

Published On 2020-01-26 12:21 GMT   |   Update On 2020-01-26 12:21 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளியை அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(வயது50). விவசாயி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் சோகத்தில் இருந்த அன்பழகன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கிய கிடந்தார்.

அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து பின்னர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த அன்பழகனின் மகன் ஆனந்தராஜ் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

Tags:    

Similar News