செய்திகள்
தற்கொலை

பெருந்துறை அருகே இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2019-12-01 14:21 GMT   |   Update On 2019-12-01 14:21 GMT
பெருந்துறை அருகே திருமணமான 1½ ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் லதா (வயது 23). இவருக்கும் பள்ளி பாளையம் அடுத்த அஞ்சுபனை பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நந்தகுமார் திருப்பூர் பணியன் கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் லதா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இதற்கிடையே பெற்றோர் வீட்டில் இருந்த லதா திடீரென வி‌ஷம் குடித்து விட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே லதா இறந்து விட்டது தெரியவந்தது.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் திருமணமாகி 1½ ஆண்டில் இளம்பெண் இறந்து விட்டதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News