உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டம்

Published On 2022-01-11 08:57 GMT   |   Update On 2022-01-11 08:57 GMT
புதுவை பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் 2 மாத நிலுவை சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

புதுவை சாலை போக்கு வரத்துக்கழக அம்பேத்கர் ஊழியர்கள் சங்கம் சார்பில் பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.  துணைத்தலைவர் சங்கர் வரவேற்றார். தலைவர் பக்கிரிசாமி, செயலாளர்   அமிர்தவேலு, பொருளாளர் பூபாலன் முன்னிலை வகித்தனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் கண்டன உரையாற்றினார். மார்க் சிஸ்டு பெருமாள், பாவா ணன், ஏ.ஐ.டி.யூ.சி. சேதுசெல்வம், மணித் கோவிந்தராஜ், சக்திசிவம், நாகமுத்து, ராஜசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

பி.ஆர்.டி.சி.யில் 2 ஆண்டாக வழங்கப்படாமல் உள்ள போனஸ், 2 மாத சம்பளத்தை வழங்கக்கோரி இந்த போராட்டம் நடந்தது.
Tags:    

Similar News