செய்திகள்
கொலை

திண்டிவனம் அருகே கடனை திருப்பி கேட்ட வேன் டிரைவர் குத்திக்கொலை

Published On 2019-11-09 15:19 GMT   |   Update On 2019-11-09 15:19 GMT
திண்டிவனம் அருகே கடனை திருப்பி கேட்ட வேன் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 24). வேன் டிரைவர். இவரது நண்பர் திண்டிவனம் வசந்தபுரத்தைச் சேர்ந்த யுவராஜ்.

இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு சிவாவிடம் ரூ. 2000 கடனாக பெற்றுள்ளார். அதனை சிவா திருப்பிக் கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு யுவராஜ் பணம் தருவதாக மாரியம்மன் கோவில் அருகே சிவாவை அழைத்தார். இதனை நம்பிய சிவா அங்கு சென்றார். அப்போது அங்கு யுவராஜ், அவரது நண்பர்கள் வெங்கடேசன், செல்வம், ஆகியோர் திடீரென்று சிவாவை கைகளால் சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். இதில் சிவா நிலை குலைந்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிய சிவாவை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிவா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன், யுவராஜ், செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News