செய்திகள்
கோப்புபடம்

ராயக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

Published On 2020-12-01 15:44 GMT   |   Update On 2020-12-01 15:44 GMT
ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

பாகலூர் போலீசார் வெங்கடேசபுரம் - அத்திமுகம் சாலையில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பிக்கிலி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 28), கணேஷ் (38), ஆஞ்சி (27), வெங்கடேசபுரம் ஆஞ்சிசெட்டி (42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், உத்தனப்பள்ளி போலீசார், சாமனப்பள்ளி ஓடை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சாமனப்பள்ளி கிருஷ்ணன் (51), கோவிந்தராஜ் (45), சீபம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (30), பங்கநத்தம் சீனிவாசன் (48) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News