உள்ளூர் செய்திகள்
கோவையில் கணவருடன் கோவில் திருவிழாவிற்கு வந்த புது பெண் மாயம்
கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு மதியம் கணவன்-மனைவி இருவரும் காரில் பெரம்பலூருக்கு திரும்பினர்
கோவை:
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயது கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 16-ந் தேதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் திருமணமான ஒரு வாரத்தில் அந்த இளம்பெண் செல்போனில் யாரிடமோ வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தக-ராறு ஏற்பட்டதாக தெரிகிறது.அப்போது அந்த இளம்பெண்ணின் தாயார் இருவரையும் சமாதானம் செய்தார்.
பின்னர் கணவன் -மனைவி சமாதானமாக வாழ்ந்து வந்தனர். கடந்த 9-ந் தேதி கூலி தொழிலாளி தனது மனைவியை அழைத்துக்கொண்டு வால்பாறை முத்து முடி எஸ்டேட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார்.
அங்கு கோவில் திரு-விழாவில் கலந்துகொண்டு மதியம் கணவன் - மனைவி இருவரும் காரில் பெரம்-பலூருக்கு திரும்பினர். அப்போது பொள்ளாச்சி புதிய பஸ் நிலையம் வந்ததும் கூலி தொழிலாளி இயற்கை உபாதைகளிக்காக பொதுக் கழிப்பிடத்திற்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது அந்த இளம்பெண் அங்கு மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
பின்னர் இதுகுறித்து கூலி தொழிலாளி பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான புது பெண்ணை தேடி வருகின்றனர்.