செய்திகள்
டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்ற காட்சி

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் - டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்தது

Published On 2020-11-20 12:24 GMT   |   Update On 2020-11-20 12:24 GMT
ராணிப்பேட்டையில் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் உள்ள தனியார் ஓட்டலில், நேற்று காலை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடைபெற்றது. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ஜெகத்ரட்சகன் எம்.பிஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேர்க்கவேண்டிய கோரிக்கைகளை மனுவாக வழங்கினார். அப்போது வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ், வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. முகமது சகி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையில் சேர்க்கவேண்டியவைகளை மனுவாக கொடுத்தார்கள். சிலர் அங்குவைக்கப்பட்டிருந்த பெட்டியிலும் மனுக்களை போட்டார்கள்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரப்பன், வில்வநாதன், நல்லதம்பி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News