கிறித்தவம்
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா

Published On 2021-12-20 04:15 GMT   |   Update On 2021-12-20 04:15 GMT
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மண்டலம், நாளை (செவ்வாய்க்கிழமை) குதிரைப்பந்திவிளை மண்டலம், 22-ந் தேதி பண்டாரக்காடு மண்டலம் சார்பில் தேர்ப்பவனி நடைபெறும்.
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா தொடங்கியது. முதல் நாளில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி போன்றவை நடந்தது. திருப்பலியை தொடர்ந்து புதிதாக தயாரிக்கப்பட்ட தேர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தேர் அர்ச்சிப்பும், மேள வாத்தியமும், வானவேடிக்கையும் நடந்தது. தொடர்ந்து தேர்ப்பவனி தொடங்கியது.

தேரினை ஆலய பங்குத்தந்தை ஜெயக்குமார் அர்ச்சித்து தொடங்கி வைத்தார். இணைப்பங்குத்தந்தை அஜின் ஜோஸ் முன்னிலை வகித்தார். புனித செபஸ்தியாரின் திருவுருவம் தாங்கிய தேர் தென்மேற்கு மண்டலம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தில் இருப்பு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் நேற்று வடக்கு மண்டலம் சார்பில் தேர்ப்பவனி நடந்தது.

இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மண்டலம், நாளை (செவ்வாய்க்கிழமை) குதிரைப்பந்திவிளை மண்டலம், 22-ந் தேதி பண்டாரக்காடு மண்டலம் சார்பில் தேர்ப்பவனி நடைபெறும். 23-ந் தேதி பொது பஜனை பட்டாபிஷேகமாக கொண்டாடப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், ஊர் துணைத்தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News