செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

Published On 2020-01-10 10:20 GMT   |   Update On 2020-01-10 10:20 GMT
பொள்ளாச்சியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (54). வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் தனது உறவினரின் 10 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து பேசி உள்ளார்.

சிறுமி பொன்னுச்சாமிக்கு பேத்தி முறை என்பதால் அவரும் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது சிறுமிக்கு பொன்னுசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

உடனே சிறுமி கூச்சல் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார். இது குறித்து தனது தாயிடம் சிறுமி கூறினார்

இதனை தொடர்ந்து பொள்ளாச்சி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பொன்னுச்சாமி தலைமறைவானார்.

அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பொன்னுச்சாமியை போலீசார் கைதுசெய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News