செய்திகள்
விபத்து

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு

Published On 2021-11-25 10:07 GMT   |   Update On 2021-11-25 10:07 GMT
சந்தவாசல் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே உள்ள அனைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. அவரது மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர், கண்ணமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சதீஷ்குமார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News