செய்திகள்
கோப்புபடம்

வலங்கைமான் அருகே மது விற்றவர் கைது

Published On 2020-09-15 15:59 GMT   |   Update On 2020-09-15 15:59 GMT
வலங்கைமான் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலங்கைமான்:

வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த வீராசாமி(வயது43). இவர் தனது வீட்டுக்கு அருகில் மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வலங்கைமான் போலீசார் வீராசாமியின் வீட்டின் அருகே சோதனை செய்தனர். சோதனையில் அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News