உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் மது அருந்தி வாகனம் ஓட்டிய 4 பேர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்பவர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் போலீசார் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அனுமதியின்றி மதுபானம் விற்பது, லாட்டரி சீட்டு விற்பது, காசு வைத்து சூதாடுவது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்பவர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டிய 4 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.