செய்திகள்
சென்னையில் நேற்று பெய்த மழையில் சென்னை அண்ணாசாலை தர்காவில் உள்ள கூரை பலத்த காற்றில் இடிந்து விழுந்த காட்சி.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா சாலை தர்கா மேற்கூரை சேதம்

Published On 2020-11-26 02:45 GMT   |   Update On 2020-11-26 02:45 GMT
சென்னையில் அதிவேக காற்றுடன் பெய்த மழையால் அண்ணா சாலையில் உள்ள தர்கா சேதம் அடைந்தது. தர்காவின் மேற்கூரைகள் அப்படியே பெயர்ந்து, பக்கவாட்டு கம்பிகள் மீது பலத்த சத்தத்துடன் சாய்ந்து விழுந்தது.
சென்னை:

சென்னையில் நேற்று காலை முதலே காற்றின் வேகம் மிகுதியாகவே இருந்தது. அதே வேளை கனமழையும் பெய்து வந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

இந்த நிலையில் அதிவேக காற்றுடன் பெய்த மழையால் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா சேதம் அடைந்தது. தர்காவின் மேற்கூரைகள் அப்படியே பெயர்ந்து, பக்கவாட்டு கம்பிகள் மீது பலத்த சத்தத்துடன் சாய்ந்து விழுந்தது. அருகே உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் சேதம் அடைந்தது.

தர்காவின் மேற்கூரை சாய்ந்து விழுந்த நேரத்தில் நல்லவேளையாக மக்கள் யாரும் நடமாடவில்லை. அதே வேளை அந்த சமயத்தில் தர்காவிலும் ஆள் இல்லை. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஒருவேளை காற்றின் வேகம் தாங்காமல் தர்காவின் மேற்கூரை அருகேயுள்ள மின்கம்பத்தில் விழுந்திருந்தால் நிச்சயம் விபரீதம் நிகழ்ந்திருக்கும். நல்லவேளையாக அது நடக்கவில்லை. அண்ணா சாலை தர்கா 100 ஆண்டு பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News