செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே சந்தையில் அனுமதி - அதிகாரிகள் அதிரடி

Published On 2021-11-23 07:01 GMT   |   Update On 2021-11-23 07:01 GMT
திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல சுகாதார துறை சார்பில் அனுப்பர்பாளையம் வார சந்தையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
திருப்பூர்:

கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் இழப்பைத் தடுக்கும் வகையில் அனைவரும் தடுப்பூசி போட அரசு வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசி போடாதவர்கள் சந்தை, மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல சுகாதார துறை சார்பில் அனுப்பர்பாளையம் வார சந்தையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. சந்தைக்கு வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். முக கவசம் அணிந்து வாருங்கள்.அடுத்த வாரம் சந்தைக்கு வருபவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் சந்தைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றனர். தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டது.   
Tags:    

Similar News