செய்திகள்
ஆரணி பகுதியில் பெண் உள்பட 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு
ஆரணி பகுதியில் 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமாணிக்கம். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோன்று ஆரணி கொசப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமி (வயது52) என்ற பெண்ணும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆரணி பகுதியில் 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமாணிக்கம். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோன்று ஆரணி கொசப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமி (வயது52) என்ற பெண்ணும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆரணி பகுதியில் 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.