செய்திகள்
கைது

திருப்புவனம் அருகே சிறுமியை கடத்திய சிறுவன் கைது

Published On 2020-06-17 08:46 GMT   |   Update On 2020-06-17 08:46 GMT
திருப்புவனம் அருகே சிறுமியை கடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம்:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியை சேர்ந்த13 வயது சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கடம்பகுடி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் சிறுமி திடீரென மாயமானாள். இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை பழையனூர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த 2 பேரும் கடம்பகுடி வந்தபோது திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பகுதியில் போலீசார் அவர்களை பிடித்தனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபானு வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.
Tags:    

Similar News