ஆன்மிகம்
மயிலாடுதுறையில் கோகுலாஷ்டமி விழா

மயிலாடுதுறையில் கோகுலாஷ்டமி விழா

Published On 2021-09-01 06:54 GMT   |   Update On 2021-09-01 06:54 GMT
மயிலாடுதுறையில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி கிருஷ்ணர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பழங்கள், இனிப்புகள் வைத்து படையலிடப்பட்டது.
மயிலாடுதுறையில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. விழாவையொட்டி கிருஷ்ணர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பழங்கள், இனிப்புகள் வைத்து படையலிடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவை நிறுவன தலைவர் ராம.சேயோன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல ரெயிலடி சாரதட்டை தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கோகுலாஷ்டமி விழா நடந்தது.

விழாவையொட்டி கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News