இந்தியா
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று

Published On 2022-01-23 11:33 GMT   |   Update On 2022-01-23 11:33 GMT
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாநில முதல் மந்திரிகள், அமைச்சர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று பரவிவருகிறது.
புதுடெல்லி:

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர் என துணை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News