செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Published On 2021-04-03 22:11 GMT   |   Update On 2021-04-03 22:11 GMT
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பெரியகுளம்:

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. போடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை பெரியகுளத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், பாம்பாற்று ஆஞ்சநேயர் கோவில், மாரியம்மன் கோவில், வரதராஜபெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உறுதியாக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றார்.

Tags:    

Similar News