செய்திகள்
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தவர் கைது
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சரஸ்வதி பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
சிவகாசி:
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சரஸ்வதி பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரத்து 500-யை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் மாரனேரி பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் நடுத்தெரு பகுதியில் ஆய்வு செய்த போது அங்கு காசிராஜன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.10,500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.