செய்திகள்
கோப்புபடம்

சட்டவிரோதமாக மதுவிற்ற 12 பேர் கைது

Published On 2021-09-19 09:08 GMT   |   Update On 2021-09-19 09:08 GMT
மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.1800 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
 
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய். உத்தரவுப்படி சட்டவிரோதமாக மது, கள்ளசாராயம் மற்றும் கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 12நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களிடமிருந்து 82 தமிழ்நாட்டு மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.1800 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News