தொழில்நுட்பம்
டிரம்ப் ஆதரவாளர்கள் பெயரில் போலி அக்கவுண்ட்கள் - கண்டறிந்து நீக்கிய ட்விட்டர்
அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருப்பின ஆதரவாளர்கள் என கூறிய போலி அக்கவுண்ட்களை ட்விட்டர் கண்டறிந்து நீக்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருப்பின ஆதரவாளர்கள் என கூறும் கணக்குகள் ட்விட்டர் தளத்தை தவறாக கையாண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
"இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டறிய எங்களது குழுக்கள் பணியாற்றி வருகின்றன. ட்விட்டர் விதிகளை மீறி பதியப்படும் ட்வீட்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட அக்கவுண்ட்களில் தவறான புகைப்படங்களை பதிவிட்டு, டிரம்ப்பிற்கு வாக்களிக்க கோரும் வகையில் ட்விட் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இவற்றில் பெரும்பாலான அக்கவுண்ட்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் அல்லது சட்ட துறையை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் இயங்கி வந்தது.