செய்திகள்
தொல் திருமாவளவன்

7 பேர் விடுதலையில் இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவு வெளியாகுமா? – தொல் திருமாவளவன்

Published On 2021-01-30 13:52 GMT   |   Update On 2021-01-30 13:52 GMT
7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒருவாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில், இதுதுகுறித்து ஆளுநர் நல்ல முடிவை இப்போதாவது எடுக்க வேண்டும் என்று கட்சியின் சார்பில் வலியுறுத்திக்கிறோம்.

தனக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள தனிப்பெரும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News