ஆன்மிகம்
சத்தியபாமா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் பவனி

வருடாந்திர தெப்போற்சவம் 2-வது நாள்: சத்தியபாமா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் பவனி

Published On 2021-03-26 05:01 GMT   |   Update On 2021-03-26 05:01 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவ விழாவின் 2-வது நாளில் உற்சவர்களான சத்தியபாமா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை உற்சவர்களான சத்தியபாமா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தனர்.

பின்னர் தெப்பத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஸ்ரீவாரி புஷ்கரணியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிப்பகிரி பிரசாத், டி.பி.ஆனந்தா, என்ஜினீயர் ரமேஷ்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News