வழிபாடு
திருப்பரங்குன்றம் கோவில்

மார்கழி மாதத்தில் திருப்பரங்குன்றம் கோவில் நடை திறப்பு நேர மாற்றம்

Published On 2021-12-15 08:53 GMT   |   Update On 2021-12-15 08:53 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
திருப்பரங்குன்றம் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடை திறப்பில் நேர மாற்றம் என்பது வாடிக்கையான ஒன்றாகும்.

அதேபோல வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) மார்கழி மாதம் பிறக்கிறது. அன்று முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News