உள்ளூர் செய்திகள்
கோவையில் மொபட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
மர்மநபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடை கண்ணர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 55). இவர் சிகரெட் விற்பனை பிரதிநியாக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று சிவக்குமார் காரமடை பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று சிகரெட் விநியோகம் செய்தார். அப்போது கடைகளில் வசூலான பணம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்தை தனது கையில் இருந்த பையில் வைத்தார்.
பின்னர் தனது மொபட்டில் ேமட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார். அங்கு தனது கையில் இருந்த பண பையை ெமாபட்டின் பெட்டில் வைத்து உள்ளே சென்றார்.சிறிது நேரம் கழித்து சிவக்குமார் மொப்பட்டை எடுத்து புறப்பட்டார். அப்போது ெமாப்பட்டின் கைபிடியில் கிரீஸ் தடவப்பட்டு இருந்தது. அது அவரது கைகளில் ஆனதால் கைகளை கழுவதற்காக மீண்டும் கடைக்குள் சென்றார்.
அந்த சமயத்தில் மர்ம நபர்கள் அவரது மொபட்டில் இருந்த பெட்டியை உடைத்து பணப்பையை திருடி சென்றனர். அப்போது அங்கு வந்த சிவக்குமார் பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் இதுகுறித்து சிவக்குமார் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு ெசய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார், கிரீஸ் தடவி கவனத்தை திருப்பி மொபட்டின் பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.